வியாழன், 20 டிசம்பர், 2012

நான் வாங்கிய வேத நூல்

அலுவலகத்தில் Facebook தடை செய்யப்பட்டு விட்டது.
தமிழ் தொலைக்காட்சிகளும் பார்க்க முடியவில்லை.
தமிழ் இதழ்களும் இங்கு அவ்வளவு கிடைப்பதில்லை.

அதனால் ஏதாவது ஒரு தமிழ்ப் புத்தகம் வாங்க முடிவு செய்தேன்.

புத்தகம் வாங்க வேண்டும்.
திரும்பத் திரும்ப படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும்.
நம்மை சோர்வடைய செய்யக்கூடாது.

இப்படி ஒரு புத்தகம் எதுவாக இருக்கும்??

உடனே என் நினைவில் வந்தது "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்" என்னும் நூல். அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய எழுச்சி நூல்.

இணையதளத்தில் பதிவு செய்து வாங்கி விட்டேன்.

தலைவர் புகழ் பாடுவது, பெருமை பேசுவது மட்டும்  என் பணி  அல்ல.

ஓர் இனத்தின்  சுதந்திர போராட்டத்தினை முற்றிலுமாக அறிந்து, அதை வெளியுலகிற்கு எடுத்துச்செல்ல செண்டும்.
எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காட்ட வேண்டும்.

அதற்கு  இந்த நூல் நல்ல துணையாக இருக்கும்.


இந்த நூலினை பார்த்தவுடன் இரு தெலுங்கு நண்பர்கள் "Guru, Are you going to be a Tamil Tiger?? [என்ன குரு,  தமிழ்  புலியாக போறீங்களா?]" என்று ஏளனம் செய்தார்கள்.

ஏன் நம்ம ஊரில் உள்ள நண்பர்களே "இப்படி இருந்தால் பொண்ணு தரமாட்டார்கள்" என்று கூட சொல்லியிருக்கிறார்கள்.

பலரும் ஈழப்போராட்டத்தை 'ஓர் ஆயுதப்போராட்டம்' என ஒரு வரியில் சொல்லிவிட்டு முடித்து விடுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் விடுதலைப்போராட்டம் என்பது பலருக்கு தெரியவில்லை.

அது சரி, சுக போக அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோம். பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிக்க முடியும்..


பிரபாகரனிசம் என்பது ஆயுதம் தூக்குவதையோ, வன்முறையையோ ஊக்குவிக்காது.
மாறாக அது போராட்டக்குணத்தினை வளர்க்கும்.


"போராடாதவன் ஜடம்" - தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் 

இந்த நூலினை கையில் வாங்கியவுடன் ஏதோ ஒரு வேத நூல் என் கையில் இருப்பதை போல ஓர் உணர்வு. மேலோட்டமாக படித்து பார்த்தேன். மிக அருமையாக தொகுத்துள்ளார் அய்யா நெடுமாறன் அவர்கள். அய்யாவுக்கு மிக்க நன்றி.


1 கருத்து: