திங்கள், 21 ஜனவரி, 2013

2014-இல் பிரதமராகும் ராகுல்காந்தி

தலைப்பை பார்த்ததும் சிலர் அதிர்ச்சி அடையலாம். இதெல்லாம் நடக்குற காரியமா?  என எண்ணலாம். ஆனால் இது நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஊழல், விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல்  விலை உயர்வு  மற்றும் பல  குற்றச்சாட்டுகளால்  மத்திய காங்கிரஸ் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

'அவ்வளவுதான், இனி காங்கிரஸ் வரவே வராது' என பலரும் நிம்மதி பெருமூச்சு விடலாம். மோடி வரட்டும் என இணையங்களில் பலர் விவரம் தெரியாமல் வீரவசனம் பேசலாம் [வீரவசனம் பேசியவர்களில் நானும் ஒருவன் :)].

ஆனால் அனைத்தையும் தாண்டி  2014-இல் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும். சோனியாவின் தவப்புதல்வர்  ராகுல்காந்தி பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமருவார்.

 எப்படி சாத்தியமாகும்? 
  • மக்களின் மறதி. இறுதி நேரத்தில் கொடுக்கப்படும் போலி வாக்குறுதிகள் பழைய நிகழ்வுகளை மக்கள் மறந்து விட செய்துவிடும்.
  • சரியான எதிர்க்கட்சி இல்லாமை. பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி யின் தலைவரை ஒரு மதவாத அமைப்பு தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. (இவர்கள் ஆட்சிக்கு வந்து என்னத்த கிழிக்க??). மூன்றாவது அணி இந்தியாவில்  எக்காலத்திலும் சாத்தியம் கிடையாது
  • காங்கிரசுக்காக பணம் வாரியிறைக்க தயாராக உள்ள  தொழிலதிபர்கள்
  • தம் மாநிலங்களில் செத்துப்போன காங்கிரஸ் பிணத்தை சுமக்க தயாராக உள்ள மாநிலக்கட்சிகள். தங்கள் சுயநலத்திற்காக, பதவிகளுக்காக இந்த மாநிலக்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
  • சோனியா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின்  ராஜதந்திரம். நம்ம ஊரு கருணாநிதியை அரசியல் சாணக்கியர் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சாணக்கியரையே அலறவிட்டவர்கள் இவர்கள்.  தேர்தல் வியூகம்(??) வகுப்பதில் காங்கிரஸ்காரர்கள் கில்லாடிகள்.

ஆக கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து பார்த்தால்  2014-இல் பிரதமராவார் ராகுல்காந்தி. இது எனது சிறு கணிப்பு. உங்கள் கணிப்புகளையும் பதிவு செய்யலாம்.

[பின் குறிப்பு: இந்தியாவை யார்  ஆண்டாலும் தமிழர்களுக்கு ஒரு நன்மையையும் கிடையாது. அதனால் இந்தியாவை  ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.]

2 கருத்துகள்:

  1. இவர் காங்ரஸ் கட்சியின் அழகிரி, இவர் சீரியஸா பண்ற காமடிய ரசிப்போம்... UP ல ஆரம்பிச்சி குஜராத் வரை பார்தாச்சுல

    பதிலளிநீக்கு
  2. எனக்கு இவர பார்த்து,ம்,அதாங்க நம்ம விவேக் நெலமை மோசமயுடுமே என்று கவலையா இறுக்கு

    பதிலளிநீக்கு