செவ்வாய், 29 ஜனவரி, 2013

துரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க

 இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 47 உறுப்பு நாடுகளின் தூதர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘டெசோ’ அமைப்பினர், அதற்கு முன் ஏற்பாடாக புதுடில்லிக்கு பயணமான நிலையில் அங்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து ‘டெசோ’ தீர்மான அறிக்கையைக் கையளித்துள்ளனர்.

டெசோ அமைப்பினரால் கொடுக்கப்பட இருக்கிற கோரிக்கை மனுவில், இலங்கைத் தமிழர்கள் அமைதியாக வாழவும், இலங்கையில் "புனர்வாழ்வு" நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும், ஜெனீவாவில் முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசை நிர்பந்திக்குமாறு அந்த உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்ள இருப்பதாக தி.மு.க மேலும் கூறியுள்ளது.

இதே கருத்தைத்தான் மூன்று வருடங்களாக இலங்கையும் கூறி வருகிறது.

அது என்ன  "புனர்வாழ்வு"? ஏன் தொடர்ந்து துரோகம்??
ஈழத் தமிழர்கள் என்ன பிச்சை கேட்கிறார்களா? தாங்கள் இழந்த மண்ணை கேட்கிறார்கள். தங்கள் இன உரிமையை கேட்கிறார்கள்.

ஈழத் தமிழர்கள் என்று சொல்லாமல் இலங்கைத் தமிழர்கள் என்று திரும்ப திரும்ப சொல்வதிலேயே தி.மு.க வின் போக்கு தெரிகிறது. சுதந்திர தமிழீழ கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதே டெசொவின் முழு நோக்கம்.
 இனப்படுகொலையையும், குற்றவாளிளையும் பற்றி வாயைத் திறப்பதே இல்லை.

நாற்பதாயிரம் பேர்தான் செத்தார்கள் என பொய்க்கணக்கு காட்டிய பிரணாப் முகர்ஜி ஒரு போர்க்குற்றவாளி. அவரிடம் அறிக்கை கொடுத்து என்ன பயன்? தமிழினத்துரோகி கருணாநிதி செய்த துரோகங்களை மறைக்க ஸ்டாலின் ரொம்ப கஷ்டப்படுறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து துணை போவது வருத்தம்.

ஈழத்தமிழர்களுக்கு தேவை வீடு அல்ல, சுதந்திர நாடு.


ஈழப்  பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஈழத் தமிழ் மக்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும்   ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும். அது ஒன்றே நிரந்தரத் தீர்வு

தமிழினத்துரோகி கருணாநிதியே! அதற்கு துணைபோகும் துரோகக் கும்பலே! ஓட்டுப்பொறுக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக