திங்கள், 4 பிப்ரவரி, 2013

போர்நெறி தவறாத தலைவன் பிரபாகரன் - உண்மைச் சம்பவங்கள்

விடுதலைப்புலிகள் மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகுந்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பல விடுதலைக் குழுக்கள் இருந்தபோதிலும் விடுதலைப்புலிகளை மட்டும் மக்கள் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் அவர்களின் ஒழுக்கமும் லட்சியத்தில் விட்டுக்கொடுக்காத பண்பும்தான்.

தமிழகத்தில் புலிகள் பயிற்சி மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் கொளத்தூர் மணி அவர்களின் நண்பர் ஒருவர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். அவர் ஒரு வேதியியல் பொறியாளர். 'ஏவுகணைகளில் வேதியியல் மயக்க மருந்தை தடவி ஏவினால் எதிரிகள் மயக்கம் கொள்வார்கள். நாம் எளிதில் வென்று விடலாம்' என்று பிரபாகரனிடம் அவர் கூறினார். இதனைக் கேட்டு சினம் கொண்ட தலைவர் கூறியது: "நீங்கள் கூறிய முறை உலகப் போர் நெறிகளுக்கு எதிரானது. உலகப் போர் நெறிகளை புலிகள் ஒருபோதும் தவறமாட்டார்கள்."


தமிழகத்திலிருந்து கடல் வழியாக ஆயுதங்களை எடுத்துச்செல்லும் பணியை தளபதி ரகு என்பவர் மேற்கொண்டிருந்தார். தமிழகத்தின் சாலைகளில் தமிழகக் காவல்துறை மிகுந்த சோதனை செய்து கொண்டிருந்தது. தங்களை மடக்கினால் ஆயுதங்களை பறிகொடுக்க நேரிடும் என்பதால் ஆம்புலன்ஸ் சின்னத்தை தன் வண்டியில் ஒட்டி காவல்துறை  சோதனையிலிருந்து தப்பித்தார் ரகு.

ஈழத்திற்கு சென்று தலைவரிடம் இதைப் பற்றித் தெரிவித்த போது கடும்கோபம் கொண்ட தலைவர் "ஆம்புலன்ஸ் சின்னம் ஒரு புனிதமான சின்னம். அதனை ஆயுதக் கடத்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது மிகத் தவறு. இது போன்ற சின்னங்களை எக்காலத்திலும் நாம் தவறாக பயன்படுத்தக்கூடாது. இதுவே முதலும் இறுதியுமாக இருக்கவேண்டும்' என்று கூறி தனது இயக்கத்தினரை எச்சரித்தார்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எம் தலைவன் ஒரு மாபெரும் உதாரணம்.

நன்றி: 'பிரபாகரன்- தமிழர் எழுச்சியின் வடிவம்  நூல்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக