ஞாயிறு, 3 மார்ச், 2013

சசிபெருமாள் என்னும் மாமனிதர்




மதுவின் பிடியில் சிக்கிக்கொண்டு தமிழகத்தில் பல குடும்பங்கள் சீரழிகிறது. இது அனைவரும் அறிந்ததே!





மது விலக்கின் அவசியம் குறித்து பல கட்சிகள், இயக்கங்கள் தொடர் பரப்புரைகள், போராட்டங்கள் நடத்துகின்றன. இதுவும் நாம் அறிந்ததே!





ஆனால் அதற்கான தீர்வு பற்றி பலரும் அறிய முன்வரவில்லை.
அறிந்தாலும் செயல்படுத்த முன்வரவில்லை.

மதுவிலக்கின் அவசியம் பற்றி பரப்புரை மேற்கொள்ளும்போது வரும் பதில்கள்:
  • இதெல்லாம் சாத்தியமா? வேற வேலைய பாருங்க பாஸ்
  • எல்லாம் அரசியல். நம்பாதீங்க சார்.
  • டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசை நடத்த முடியாது.
இப்படி பதில்கள்தான் கிடைக்கிறது.

சில இடங்களில் நான் வைத்த கேள்வி
'தங்கள் மகன்/மகள் மது அருந்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?"
இந்த கேள்விக்கு பெரும்பாலும் பதில் வருவதில்லை.

அதாவது தன்  குடும்பம் நல்லா வரணும். மத்தவன் பத்தி கவலை  இல்லை என்னும் குறுகிய மனப்பான்மை பலரை ஆட்கொண்டுள்ளது.

இதனால்தான் அய்யா சசிபெருமாளின் போராட்டத்திற்கு  ஆதரவு இல்லை.



தமிழகத்துக்கு வெளியே இருப்பதால் 25நாள் அப்புறம்தான் எனக்கு தெரிந்தது. வாழ்க ஊடகங்கள்!

அவன்  ஏன் போராடல? 
அந்த டைம்ல ஏன் போராடல? 
இது ஓட்டு பெற நடத்தப்படும் சூழ்ச்சியோ? 
இந்தமாதிரி கேள்வி கேட்டு கேட்டு தானும் கெட்டு மத்தவனையும் கெடுக்காதீர்கள்.

அய்யாவின் போராட்டத்தை ஆதரித்து, நாமும் பங்கேற்போம்.
தமிழகத்தைக் காப்பாற்ற மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக