திங்கள், 11 மார்ச், 2013

வியக்க வைக்கும் மாணவர்கள்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் மாணவ சக்தி ஒன்றுபட்டு எழுந்துள்ளது. தலைநகரில் லயோலா கல்லூரி மாணவர்கள் ஆரம்பித்து வைத்த போராட்டம் தமிழகத்தின் பல இடங்களிலும் எழுச்சி பெற்று நடைபெறுகிறது.

இம்முறை மாணவர்கள் வெறும் உணர்வுடன் மட்டும் எழுச்சி கொள்ளவில்லை. தமிழீழம் தொடர்பான மாபெரும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கைகளுடன் களத்தில் உள்ளனர்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள 9 கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைக்கிறார்கள்.
மிகவும் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ள கோரிக்கைகள்


இது மட்டுமில்லாமல் பல இடங்களில் தமிழர் விரோத சகுனி சு.சாமியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளதிலிருந்து மாணவர்களின் தெளிவானப் பார்வை புரிகிறது.

ஜனநாயகப்  போராட்டத்தை பாசிச முறையில் அடக்க நினைத்து போராட்டத்தை தமிழகத்தின் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற தமிழக பாசிச அரசுக்கு நன்றிகள் பல.

அனைத்து மாணவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள்:

போராட்டத்தில் அரசியல், வன்முறை கலந்திடாதவாறு  கவனமாக செயல்படுங்கள்.

தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்களிடம் முறையாக் கொண்டு சேருங்கள்.

களத்தில் சந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக