திங்கள், 10 ஜூன், 2013

நரேந்திர மோடி: மீடியாவால் உருவாக்கப்பட்ட மாய பிம்பமா?

பாஜக கட்சியில் தேர்தல் பிரச்சாரக் குழுத்  தலைவராக நரேந்திர மோடியை அந்த கட்சி தேர்வு செய்துள்ளது. 
இதனை பலர் பட்டாசு போட்டு  கொண்டாடுகிறார்கள். ஆளாளுக்கு   வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இந்திய ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பலர் கூவுகிறார்கள்.

இப்ப என்ன நடந்து விட்டது? என்னவோ மோடி நாட்டின் பிரதமர் ஆனா ரேஞ்சுக்கு பில்டப்  கொடுக்குறாங்க.
'பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவரா? இல்லையா?' என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள் (அதற்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீர்மானிக்க வேண்டும்). அதனை பற்றி இப்போது விரிவாக பேச  தேவையில்லை.

மோடி என்னும் பெயர் எப்படி பலரை சென்றடைந்துள்ளது? என்பதை பார்ப்போம்.
நான் பல மாநில நண்பர்களிடம் பேசும் வாய்ப்பு பெற்றவன். அனைவரிடமும் அரசியல் பேசி அவர்களுடைய விருப்பத்தை கேட்டு அறியும் பழக்கம் உள்ளவன்.

மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.

* குஜராத் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது

* காங்கிரஸ் சரியில்லை. பிஜேபி வரட்டும்.


பெரும்பாலும் இந்த இரு பதில்கள் மட்டும் வரும்.
இந்த இரு கருத்துக்களில் இரண்டாம் கருத்து எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.
திமுக, அதிமுக என்று மாறி மாறி நாம் ஏமாறுவது போலத்தான்.

முதலாவது கருத்தை நாம் யோசிக்க வேண்டும்.
  • குஜராத்ல இருக்குற ஒரு பயலுக்கும் தமிழர் பிரச்சினைகள் ஏதும் தெரியல.  ஆனால் இங்க இருக்குற பலர்  'குஜராத் வளருது, மோடி அப்படி, இப்படி'-ன்னு சொல்லுறாங்க. 
          குஜராத்-ல  நடக்கிறது எப்படி தமிழனுக்கு தெரிஞ்சிது? தமிழ்நாட்டுல நடக்குறது ஏன் குஜராத்திக்கு தெரியல?
  •  பல மாநிலங்களிலும் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அவை எவையும் வேறு எந்த  மாநில மக்களிடமும் சென்று அடைவதில்லையே!! ஏன்?

ரொம்ப சிம்பிள்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா குடிநீர் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறார். ஆந்திராவில் முதல்வர் கிரண்குமார் ஏதாவது   திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறார். இவர்கள் செயல்படுத்தும் திட்டங்கள் மாநில தொலைக்காட்சிகளில், செய்திதாள்களில்  மட்டும் காட்டப்படும். அதை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
ஆனால் குஜராத்தில் மோடி ஏதேனும் ஒரு அறிக்கைகொடுத்தால் கூட அதனை அனைத்து இந்திய ஊடகங்களும் திரும்ப திரும்ப ஒளிபரப்புகின்றன. செய்திதாள்களில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்.

பலர் கருத்துப்படி மோடி வல்லவர், நல்லவர் என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால்
  • பா.ஜ.க வில் திறமையான தலைவர்கள் வேறு யாரும் இல்லையா??
  • இந்தியா முழுக்க வேறு தலைவர்கள் யாரும் இல்லையா?
  • மிகத் திறமையானவர், குஜராத் வளர்ச்சியடைந்துள்ளது என்றால் அவர் ஏன் தேர்தலில் கோடி கோடியாக செலவு செய்து முட்டி மோதினார்?
மோடி என்னென்ன செய்தார்? அவரது கொள்கைகள்/சாதனைகள்  என்ன?  மற்ற முதல்வர்களிடமிருந்து எவ்வகையில் வேறுபடுகிறார் என எதையும் சொல்லாமல் வெறும் மோடி புராணத்தை மட்டுமே பலர் பாடுகிறார்கள்.
மோடி என்னும் பிம்பம் மீடியாக்களால் உருவாக்கப்பட்டது என்பது கண்கூடாக  தெரிகிறது.

நேற்று மோடி தேர்தல் பிரச்சாரக் குழுத்  தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் பலர் தங்கள் கருத்துக்களை இணையங்களில் பதிவு செய்திருந்தார்கள்.  பலர் கருத்துக்களில் மதவாதம் தலைவிரித்து ஆடியது.
அதில் ஒரு கருத்தை பாருங்கள்

கட்சியின் கொள்கைகள்/சாதனைகள் எவற்றையும் முன் வைக்காமல் ஒரு தனி மனிதரை முன்னிறுத்தி அரசியல் செய்வதால் பா.ஜ.க விற்கு பின்னடைவே!! அன்ன ஹாசாரே ஏன் வீழ்ந்தார் என்பதை பா.ஜ.க சிந்திக்க வேண்டும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக