செவ்வாய், 8 ஏப்ரல், 2014

மதவாத தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை என்னும் பெயரில் இந்த சமூகத்தில் மதவாதக் குப்பையை அள்ளி போட்டிருக்கிறது பாஜக.

அறிக்கையிலுள்ள சில விசயங்களை பார்ப்போம்.

ராமர் கோவில் கட்டப் போகிறார்களாம்.

//இருக்கிற கோவில்களை பராமரிப்பு செய்யாமல், ராமனுக்கு கோவில் கட்ட துடிப்பதன் நோக்கம் என்ன?
மனைவியை நெருப்பில் இறங்க சொல்லி கற்பை நிரூபிக்க சொன்ன ராமனுக்கு என்ன ***க்கு கோவில்??
(ராமாயணம் என்பதே கட்டுக்கதை.. அது வேற விடயம்)
அனைத்து இந்துக்களும் சமம் என்றால் பிராமணர் அல்லாதவர்கள் கோவில் அர்ச்சகர் ஆக முடியவில்லையே ஏன்?
சூத்திரனுக்கு கோவிலில் உரிமை கூட தர மாட்டாய்.. ஆனால் சூத்திரன் ஓட்டுக்கள் மட்டும் தேவைப்படுதோ!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை (370) நீக்கப் போகிறார்களாம்.
//காஷ்மீரில் காணாமல் போன பல இளைஞர்கள் நிலை , அதிகமான ராணுவ ஆக்கிரமிப்பு, ராணுவம் செய்யும் அட்டூழியங்கள் இவை எதுகுறித்தும் பேசாமல்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து விவாதிக்கணுமாம்.. என்ன ஒரு அயோக்கியத்தனம்!!!

பசுக்களைக் கொல்வதை தடை செய்யப் போகிறார்களாம்.
//அப்படியே ஆடு வெட்ட தடை, கோழி குழம்பு தடை, மீன் பிடிக்க தடை என்ன அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே!!
லூசுப்பயலுக!!
பசியாலும், மழையாலும், வெயிலாலும் மனுசன் சாவுறான்.
அதை தடுக்க முடியாத அயோக்கிய அரசியல் கூட்டம் மாடு குறித்து பேசுது.
த்தூ!!!

பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போகிறார்களாம்!!
இது குறித்து போதுமான  விவரம் எனக்கு தெரியல.
ஆனால் பல தேசிய இனங்கள்  வாழும் இந்திய ஒன்றியத்தில் பொது சிவில் சட்டம் என்பது ஏற்புடையதல்ல.
மாநில சுயாட்சியை ஏற்கனவே பறித்துவிட்டார்கள்..
இன்னும் என்னென்ன மாநில உரிமைகளை பறிக்கப் போகிறார்களோ!!



இந்த நான்கு விசயங்களும் பாஜகவினால் எழுதப்பட்டவை அல்ல.
மோடியை பிரதம வேட்பாளராக அறிவிக்க ஆர்எஸ்எஸ் என்னும் பிற்போக்கு கும்பல் விதித்த கட்டளைகள்.
இங்கே பார்க்க: http://indiatoday.intoday.in/story/narendra-modi-rss-rss-conditions-for-modi-bjp-pm-candidate-ayodhya/1/309155.html

இந்த கட்டளைகளைத்தான் தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
மதத்தை தாண்டி பாஜக கும்பலால் சிந்திக்க முடியாது என்பதை அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்னும் உண்மையை இனிமேலாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்து மதத்தின் பெயரால் செய்யப்படும் இந்த பிற்போக்கு அரசியல் பிற மதத்தினருக்கு ஆபத்து என்பது சொல்வது சரியல்ல.
உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் எதிரானது.


கோவில் கருவறை போராட்டம் நடத்தினால் முதல் ஆளாக வந்து எதிர்ப்பது பாஜக , இந்து முன்னணி போன்ற கும்பல்கள்தான்.
இவர்கள் பார்ப்பனருக்கு சேவை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள்..
பார்ப்பனர் அல்லாதோருக்கு கோவிலில் உரிமை மறுப்பவர்கள்.
தமிழையும், தமிழனையும் கோவிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க கூட்டத்திற்கு அடியாள் வேலை செய்பவர்கள்.
சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாடுகளை ஆதரிப்பவர்கள்.
ஆனால் இந்து ராஷ்டிரா, ராம ராஜ்ஜியம் என்று பேசி உழைக்கும் வர்க்க மக்களுக்குள் மனதில்  மதவாதத்தை விதைப்பவர்கள்.

இந்துத்வ கும்பலைப் புறக்கணிப்போம்.

இந்து என்னும் அடையாளம் என் மீது திணிக்கப்பட்டிருப்பதால்  இந்துத்வ பிற்போக்கு அரசியலை எதிர்க்க வேண்டியது என் கடமையாகிறது.

கடமை தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக