வியாழன், 2 அக்டோபர், 2014

இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவம்

காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக் தமிழகம் வந்து உரையாற்றினால் தேசத்துரோகம் என்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணன், ஞானதேசிகன் என அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள்.

ஆனால் ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் தலைவர் அரசுத் தொலைக்காட்சியில் உரையாற்றப் போகிறார்.
அதைக் கண்டித்து ஒரு பயலும் வாயைத் திறக்க மாட்டான் (காங்கிரஸ்காரன் உட்பட).
மோகன் பகவத் மக்களால் தேர்ந்தெடுப்பட்டவரா? என்று மறந்தும்கூட கேட்டுவிட மாட்டார்கள்.

பிற மதத்தினருக்கு எதிராக பல முறை சர்ச்சையாக பேசியவர் மோகன் பகவத்.
இதெல்லாம் தெரிந்தும் அவர் தூர்தர்சனில் பேச அனுமதிக்கிறார்கள் என்றால், இவர்களின் இந்திய தேசப்பக்திக்குப் பின்னால் இந்துத்துவமும் ஒட்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக