திங்கள், 27 அக்டோபர், 2014

சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்கள்??

நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் 'தந்தை-மகள்' தலைப்பில் நவீன பெண்களும் தந்தைகளும் விவாதித்தார்கள்.
ஆரம்பத்தில் விவாதம் சற்று மந்தமாக போய்க் கொண்டிருந்தது.
வேறு வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறுதிக் கட்டத்தில் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.

* பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் தங்கள் கருத்துக்களை அருமையாக முன்வைத்தனர்.

* ஆடைக் கலாச்சாரம் பற்றி விளாசினர்.
"என் ஆடை, என் உரிமை, நீ மூடிட்டு போ" என்பது போலத்தான் பலர் கருத்துக்கள் இருந்தன.
ஜேசுதாஸ் போன்றவர்களுக்கு செருப்படி போல விழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

* 'நன்கு படித்த, சம்பாதிக்கிற, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பையனைத் திருமணம் செய்வீர்களா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
சற்றும் யோசிக்காமல் பல பெண்களும் 'ஆமாம்' என்று கையை உயர்த்தினர்.

பின்னர் அதே கேள்வி தந்தைகளிடம் வைக்கப்பட்டது.
தந்தைகளும் ஆமோதித்தனர்.

இந்தக் கேள்வியை முன்வைக்கும் முன்னரே ' என் அப்ப சாதியைப் பிடித்து தொங்குவார். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது' என்றார் ஒரு நவீனத் தமிழச்சி.
சபாஷ்!!

'அவ்வளவுதான்டா. தமிழகத்தில் சாதி ஒழிந்தது' என்று அறையில் உள்ள நண்பரிடம் மகிழ்ச்சியாக சொன்னேன்.

கடந்த வருடம் "சாதியை ஆதரிக்கும் பெண்கள் - சாதியை எதிர்க்கும் பெண்கள்" விவாதம் நடந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் சாதியை ஆதரிக்கும் பெண்கள்கூட சாதி எதிர்ப்பு நிலையில் வந்து பேசியது ஞாபகம் இருக்கிறது.



சாதிக் கட்டமைப்பு என்பது வேண்டாத ஒன்றாக இன்னும் இந்த சமூகத்தில் கிடைக்கிறது.
சாதியைப் பயன்படுத்தி வயிறு வளர்க்கும் கூட்டமும், போலிக் கவுரவம் (சாதி கவுரவம் அல்ல, இழுக்கு) பார்க்கும் நபர்களும்தான் அதனைப் பிடித்து தொங்குகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தங்களை தொடர்ந்து அப்டேட் செய்து கொள்கிறார்கள். சாதியை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதுதான் நேற்றைய நிகழ்ச்சியில் கற்றுக் கொண்டது.

முற்போக்கு கொள்கைகளை எவ்வளவுதான் ஆண்கள் பேசினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு அதிகம் அவசியம்.
சாதிக் கட்டமைப்பில் தீயை வைக்கும் பெண்களுக்கு வாழ்த்துககள்.

சாதி சங்கங்கள் பெருகி சாதியைக் காக்க முயன்று கொண்டிற்க்கும் இந்தக் காலக்கட்டத்தில், இம்மாதிரியான நவீனப் பெண்கள் மறுபுறத்தில் சாதிக் கட்டமைப்பில் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

"டெல்லி வேற நாகரிகம் (Modernism). அது உடையை மையப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாடு அப்படியல்ல, அது கருத்து சிந்தனையை மையப்படுத்திய நாகரிகம்(Modernism).
பெரியார் ஒரு Modernist, பாரதி ஒரு  Modernist" என்று முடிவுரை வழங்கினார் கோபிநாத்.

நேற்றைய நிகழ்ச்சி குறித்து மேலும் எழுதியுள்ளார் ஒரு நண்பர்.


யூடியூப் தளத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. பார்க்காதவர்கள் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக