திங்கள், 3 நவம்பர், 2014

தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்

நிகழ்வு 1: (ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஊறிய) பாஜக எம்பி தருண் விஜய் தமிழைப் பாராட்டியதால் அவருக்கு சென்னையில் பாராட்டு விழா.
(சமஸ்கிருத, இந்தி திணிப்பு நடக்கும்போது/நடந்தபோது இவர் காணாமல் போய்விடுவார்)

இது இந்துத்துவத்திற்கு தமிழ் முலாம் பூசும் செயல்.


தமிழை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக்க அவர் இருக்கும் பாஜகவோ, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ தயாரா? என்று தருண் விஜயிடம் கேட்டு சொல்லுங்கப்பா...


நிகழ்வு 2: ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் முடிவு.

இது தமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்.

இரண்டிலும் அரசியல் லாபம் அடைவதும் ஆர்.எஸ்.எஸ்.
இரண்டாலும் பாதிக்கப்படப் போவது தமிழினம்.




கொல்லைப்புற வாசல் வழியாக கூட இந்துத்துவ இயக்கங்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
அதனால் தமிழைக்கொண்டு தமிழர்களை ஆரியமயப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

தமிழா! விழித்துக் கொள்!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...", "யாதும் ஊரே யாவரும் கேளிர்.." என்பது தமிழனின் பண்பட்ட நாகரீகம்.

பிறப்பால் பிராமணன், சூத்திரன் என மனிதர்களைக் கூறு போடுவதும், பிற மதத்தினரை எதிரிகளாக சித்தரிக்கும் பிற்போக்கு சிந்தனையே இந்துத்துவம்.

எது சிறந்தது என்று உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

2 கருத்துகள்:

  1. ஹிந்துத்துவ விஷம் ஜரிகை காகிதம் சுற்றி தமிழர்களுக்கு கொடுக்கப்படுகிறது. தமிழர்கள் விழித்துக் கொண்டால் தப்பிப் பிழைக்கலாம். ஏமாந்து போனால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல மீண்டும் மனு தர்ம அடிமை சூத்திரர்களாக வாழலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்.
      தங்கள் பெயரிலேயே வந்து சொல்லியிருக்கலாமே!

      நீக்கு