புதன், 3 டிசம்பர், 2014

பாபர் மசூதி விவகாரம்: என்னதான் தீர்வு?

"டிசம்பர் 6"

இந்துத்துவ மத வெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
மத நல்லிணக்கத்திற்கு பெரும் களங்கம் விளைவிக்கப்பட்ட நாள்.
காவிகளின் கடப்பாரையால் தகர்க்கப்பட்டது செங்கல் சிமெண்டால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல, மனிதர்களின் உணர்வுகளும்தான்.



ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முழுக்க ஒருவிதமான பதட்டமான சூழ்நிலை உருவாகிறது.
பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், திரையரங்குகள் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் காவல்துறை மற்றும் துணை ராணுவம் குவிக்கப்படுகிறது.
பெருமளவில் சோதனை நடத்தப்படுகிறது.
தேவையற்ற பீதிக்கு மக்கள் ஆளாகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் இந்த துயர சம்பவத்தை கொண்டாடும் காவி கும்பல்களும் சமூகத்தில் ஊடுருவி குழப்பம் விளைவிக்கிறார்கள்.

இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இவ்வாறு நடந்து கொண்டிருக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்காமல் இன்னும் எத்தனை வருடங்களுக்கு காலம் தாழ்த்துவது?
தீர்வு நோக்கி இந்திய ஒன்றியத்திலுள்ள மக்கள் அனைவரும் எப்போது சிந்திக்கப் போகிறார்கள்?

"மசூதியை இடிப்பிற்கு மூலகாரணமாய் இருந்தவர்களை சிறைக்கு அனுப்புவதும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டி எழுப்புவதும் தவிர வேறு எதுவும் தீர்வாகாது."
இஸ்லாமியர் அல்லாத மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பணியை செய்ய முன்வர வேண்டும்.
அதுவே இந்திய மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.


இன்னொரு விசயம்.
பாபர் வெளிநாட்டுக்காரன், பாபர் மசூதி இந்திய அவமானச் சின்னம் என்று காவிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்தியாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், அணைகள், கோட்டைகள் என பலவும் வெளிநாட்டுக்காரன் கட்டியதுதான்.
அதையும் அவமானச் சின்னம் என்று சொல்வீர்களா?
காவிகளே! எப்போது சிந்திக்கப் போகிறீர்கள்?
உங்கள் மதவாத்திற்கு இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குவீர்கள்??

காவிகளின் கூச்சல் ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் வாளேந்திய வம்சம், யாருக்கும் அஞ்சமாட்டோம்  என்று பக்கம் பக்கமாக வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
வசனம் பேசினால் தீர்வு/நியாயம் கிடைத்து விடும் என்று யார் சொல்லி கொடுத்தார் என்று தெரியல.
அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுங்கள்.
ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முன்வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக