செவ்வாய், 13 ஜனவரி, 2015

முடிவில்லாமல் தொடர்கிறது ஜெயமோகனின் புளுகல்

எழுத்தாளர் பெருமாள் முருகன் பிரச்சினை பற்றி எழுதும்போது சம்பந்தமே இல்லாமல் பெரியார் மீது அவதூறு வைத்துள்ளார் ஜெயமோகன்.
( பெரியார் இன்னும் அச்சுறுத்துகிறாரோ!! ).

இடைநிலைச் சாதிகளின் மேலாண்மைக்காக பெரியார் பாடுபட்டாராம்!
அவர்களின் சாதிப்பற்றைக் கைவிடும்படி கூறவில்லையாம்!!

இவ்வாறு புளுகுவது அவருக்கு புதிதில்லை. ஆனாலும் பெரியாருக்கு சற்றும் தொடர்பில்லாத பிரச்சினையில் அவரை ஏன்யா இழுக்குறீங்க!!
ஒருவகையில் இதுவும் நல்லதுதான். பெரியாரிசத்தை வாழ வைக்கும்.

மறுப்பு தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
அதில் கூறியவற்றை அப்படியே இங்கு பதிக்கிறேன்.

"என்ன அழகா புளுகுறீங்க!!
பார்ப்பனியம் என்றாலே பொய் புரட்டுதானே!

கடைசிவரைக்கும் சாதிவெறியர்களை நீங்கள் கண்டிக்கவில்லையே மிஸ்டர் ஜெயமோகன்!!

ஆனால் வன்னியர் மாநாட்டில் மேடையேறி சாதிக்கு எதிராக பேசினாரே பெரியார்!
சத்திரியன் என்றால் பார்ப்பானுக்கு அடிமை. அதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு என்றாரே!
அவர்தாம் பெரியார்! உங்களால் சொல்ல முடியுமா?

பெயரில்கூட சாதி இருக்க கூடாது என்று மக்களிடம் சொன்னாரே பெரியார்!
நீங்க சொன்னீகளா?? இல்லை வேறு பார்ப்பனர்கள் சொன்னார்களா??

சாதியை கட்டிக்காக்கும் புராணங்களையும், வருணாசிரமத்தையும் சமரசமில்லாமல் எதிர்த்தாரே பெரிரார்! உங்களால் முடியுமா??

வழிபாட்டு சமத்துவம் வேண்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த பெரியாரிஸ்டுகள் வந்தார்கள், வருவார்கள். நீங்கள் வருவீர்களா?

பார்ப்பான் எச்சி இலையில் சூத்திரனை உருளச் சொல்லுதய்யா உன் இந்து மதம்!
ஜெயேந்திரனுக்கு கால் கழுவி விட சொல்லுத்தய்யா உன் இந்து மதம்!
பெரியார் எதிர்த்தார். நீங்கள் என்ன செய்தீர்கள்?

சாதியால் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டால் நான் பார்ப்பனர் பக்கம் நிற்பேன் என்றாரே! அவர்தாம் பெரியார்!

இன்று சிலர் கொழுப்பெடுத்து சாதித் திமிர்ப் பிடித்து திரிந்தால் பெரியார் என்ன செய்வார்?
அவரை சாடுவதை விடுத்து சாதிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்க.
இந்த மாதிரி குட்டையைக் கிளப்புற வேலை வேண்டாம்.

பார்ப்பனியத்தை வீழ்த்தினால் சாதிக் கட்டமைப்பு வீழும் என பெரியார் எண்ணியிருக்கலாம்!
ஆனால் பாழாய்ப் போன இடைநிலை சாதிகள் இன்று பார்ப்பனியத்தைக் கையில் எடுத்து திரிகின்றன."
 picture: Cartoonist bala
==
இந்து மதத்திற்கும் அதிலுள்ள சாதிக் கட்டமைப்புக்கும் எதிராக கலகம் செய்த அய்யா வைகுண்டர், நாராயண குரு, வள்ளலார், புத்தர் எனப் பலரையும் லாவகமாக தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டீர்கள்!
ஆனால் பெரியார் மட்டும் இன்னும் கலகம் செய்து அச்சுறுத்துகிறார்!
அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெரியார் மீது சேறு வாரி இறைக்க காத்திருக்கிறது பார்ப்பனியம்.

கொய்யால! திமிருடன் சொல்லுவோம் இது 'பெரியார் மண்'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக