வெள்ளி, 1 மே, 2015

பெரியார் ஆதரித்தது தமிழ்த்தேசியம், வீரமணி ஆதரிப்பது இந்திய தேசியம்.

பெரியார் தன் இயக்க நாளிதழுக்கு "விடுதலை" என்று பெயர் வைத்தார். அது தமிழ்த்தேசிய விடுதலையைக் கருத்தில் கொண்டுதான்.. அத்தோடு "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வாசகத்தையும் இணைத்திருந்தார்..

அதே போல குடியரசு என்கிற பெயரும் "தமிழ்தேசியக் குடியரசைக்" கருத்தில் கொண்டுதான்..

ஆனால் "தமிழ்நாடு தமிழருக்கே" என்னும் முழக்கத்தை நாளிதழிலிருந்து நீக்கிவிட்டு , பொது ஊடகத்தில் "தமிழ்த்தேசிய வியாதிகள்" என்று சொல்லும் அளவுக்கு கி.வீரமணிக்கு துணிச்சல் எவ்வாறு வந்தது?

இந்திய தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடாமல், தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீர்மானம் போடும் வீரமணி கும்பலுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?? என்ன (&^^&$&^க்கு 'தமிழர் தலைவர்' என்கிற அடைமொழி'???

இந்தியாவுக்கு‬ முட்டு கொடுத்து திராவிடம் பேசுகிறவர் எவராக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே எதிர்க்கலாம்.. ஏனெனில் அது கண்டிப்பாக பிழைப்புவாதமாகத்தான் இருக்கும்..

1 கருத்து: