சனி, 21 நவம்பர், 2015

பேஸ்புக்கின் பிரச்சாரம் தீவிரவாதத்திற்கு எதிராகவா? அரசப் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவா?

சில நண்பர்கள் மூவண்ணத்தில் வாட்டர்மார்க் அடித்த புகைப்படத்தை ப்ரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து பேஸ்புக் வந்ததால் என்ன காரணம் என்று தெரியவில்லை. டிஜிட்டல் இந்தியா மாதிரி வேறு ஏதேனும் திட்டம் வந்து விட்டதோ என்று எண்ணினேன்.
அப்புறம்தான் தெரிந்தது அது பிரான்ஸ் நாட்டின் கொடியின் வண்ணம் என்று.





இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன.

* இனி எங்கெல்லாம் குண்டு வெடிக்குதோ, அந்தந்த நாடுகளின் கொடியை ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா? அதன் மூலம் தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியுமா?

* தீவிரவாதத்திற்கு மதம், இனம், நாடு என எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால் தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

* தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாமல் போலி தேசபக்தியையும், அரச பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் செயலுக்கு பேஸ்புக் உடந்தை போகிறதா?.

* பிரான்ஸ் அரசின் பயங்கரவாதத்தால் சிரியாவில் கொல்லப்படும் அப்பாவிகளுக்காக நான் சிரியாவின் கொடியை எனது ப்ரோபைல் படமாக வைக்க வேண்டுமா?

* சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பள்ளிக்குழந்தைகளை தீவிரவாதிகள் கொண்டபோது பாகிஸ்தான் கொடியை முகப்பு படமாக வைக்க சொல்லி பேஸ்புக் பிரச்சாரம் செய்ததா?
 

ரொம்ப குழப்பமா இருக்கு.. உருப்படியான பதில் இருந்தா சொல்லுங்க மக்களே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக