வியாழன், 24 டிசம்பர், 2015

பெரியாரோடு முற்றிலும் முரண்படும் இடம்

#டிசம்பர்25‬ 
 ‪#‎கீழவெண்மணிப்‬ படுகொலை

சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் அயோக்கியனால் தஞ்சை மண்ணில் 44 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.

பெரியாரோடு நான் முற்றிலும் முரண்படும் இடமும் இதுதான். இறுதிவரையில் நாயுடுவை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் கம்யூனிஸ்டுகளை வசைபாடுவதில் குறியாய் இருந்திருக்கிறார் பெரியார்.

திராவிட அமைப்புகள் ஏன் இந்தப் படுகொலையை அனுசரிப்பதில்லை? என்கிற காரணத்தை யாரேனும் சொல்லுங்க.. தஞ்சை மண்ணில் உதித்த செங்கொடி புரட்சியை ஒடுக்கியதில் திமுக கண்ணீர்த்துளிகளுக்கு பெரும்பங்கு உண்டு..

பாட புத்தகத்தில் வரலாறாகப் பதியப்பட்டு சாதி மற்றும் முதலாளித்துவத்தின் ஆபத்து குறித்து விளக்கப்படவேண்டிய நிகழ்வு கீழ்வெண்மணிப் படுகொலை. அப்படியான ஒரு நிகழ்வை தமிழர்களுக்கு தெரியாத வண்ணம் செய்துவிட்டார்கள் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும்.

‎சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி கொண்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் கூட்டாளிகள் திமுகவும், மூப்பனாரும்...

உலகமே திரும்பிப் பார்த்த நிகழ்வு 'கீழவெண்மணிப் படுகொலை'. ஆனால் உள்ளூரு தமிழனுக்கு  தெரியாமல் மறக்கடிக்கப்பட்டது.. தமிழன் வரலாறு எவ்வளவு மோசமாக இருக்குது பாருங்க..

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பார்ப்பான் அதை செய்தான், இதை செய்தான் என பார்ப்பானுக்கு  எதிராக அட்டைக்கத்தி வீசுபவர்கள் நாயுடுவின் சாதிவெறி மற்றும் முதலாளித்துவ வெறி பற்றி எங்கேயும் பேசுவதில்லை..
தமிழா! நீ பேசு!! செவிட்டுக் காதுகள் கிழியும் வரை பேசு!

பின்குறிப்பு: நாயுடுவை போட்டுத் தள்ளியதில் தி.க தோழர்களும் உண்டு.

#உண்மை உறங்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக