புதன், 27 ஜனவரி, 2016

மக்கள் நலக் கூட்டணி அடுத்து என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திமுக-அதிமுக அல்லாத மூன்றாம் அணி வலுவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் ஆகிய கட்சியினர் கூட்டணி அமைத்துள்ளார்கள்..





எப்படியேனும் கூட்டணியை உடைத்து விடலாம் என்பதில் திமுகவுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
இந்தக் கூட்டணியால் வாக்குகள் சிதறி தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக எண்ணுகிறது..
பாமக, பாஜக போன்ற கட்சிகளும் தங்களின் விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள்..

ஒரு வழியாக "மக்கள் நலக் கூட்டணி" என்கிற பெயர் பெரும்பாலான மக்களிடம் சென்று அடைந்து விட்டது.
இனி அடுத்து  என்ன செய்ய வேண்டும்??

1. விஜயகாந்த் தங்கள் அணிக்கு வர வேண்டும் என அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்..

2. தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது சட்டத்திற்கு முரணானது. ஆனாலும் அனைத்து கட்சிகளும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துகிறார்கள்.
அவ்வகையில் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இளைய தலைமுறையினால் அதிகம் ஈர்க்கப்பட்ட தோழர் நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்.

3. விரைவில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து தங்களின் சின்னங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
ஏனென்றால் இன்னும் இரட்டை இலை, உதயசூரியன் தவிர வேறு சின்னங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர்.

4. ஊடக பலமோ, பெரு முதலாளிகளின் பலமோ மக்கள் நலக் கூட்டணிக்கு கிடையாது.
அதனால் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் திமுக மற்றும் அதிமுகவை மிஞ்ச முடியாது. மதுரை மாநாட்டு செய்திகளையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்..
அதனால் தொண்டர்களை வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்ய வலியுறுத்த வேண்டும்.. இணையதளப் பிரச்சாரம் மட்டுமே உதவாது.

5. அதிமுக மற்றும் திமுக இரு கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்..
இல்லையேல் அதிமுகவின் பி டீம், திமுகவின் பி டீம் என்கிற தேவையற்ற விமர்சனங்கள் வரக் கூடும்...

அதிமுக மற்றும் திமுகவை மோதிப் பாருங்கள். வாழ்த்துகள்..
என்னதான் நடக்குன்னு ஒருகை பார்த்திடுவோம்.. :)

வெற்றியோ, தோல்வியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதிமுக மற்றும் திமுகவை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தி நல்லதோர் அரசியலை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக