வெள்ளி, 29 ஜனவரி, 2016

இந்தியப் பெருச்சாளிகளும், தமிழக அடிமைகளும்

கல்வி' என்பது இந்திய  அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் உள்ளது. அதாவது கிட்டத்தட்ட மத்திய அரசு கையில் உள்ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது/மறுப்பது என எல்லாம் மத்திய அரசு கையில்தான் உள்ளது..

அப்படி இருக்கையில் விழுப்புரம் யோகா கல்லூரியில் மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிரானி. மாநில அரசைக் கைகாட்டி தப்ப முயற்சிக்கிறார்.

மாநில அரசுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்றால் இந்திய அரசு தயாரித்து வரும் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க மாட்டோம் என ஸ்மிருதிரானி சொல்வாரா? இங்குள்ள சி.பி.எஸ்.இ (கல்வி)வியாபார நிறுவனங்களை மாநில அரசு தடை செய்தால் ஏற்றுக் கொள்வாரா?
மாநில அரசின் எந்த நடவடிக்கையிலும் இனி மத்திய அரசு தலையிடாது என்று சொல்வாரா?


"இந்தியா முழுக்க மது உள்ளது, ஆகவே தமிழகத்தில் மட்டும் மதுவை தடை செய்ய முடியாது' என நம்மூர் அமைச்சர் அடிமைகள் சொல்வதுண்டு.
"இந்தியா முழுக்க 50% இட ஒதுக்கீடுதான் அனுமதி. தமிழகத்தில் மட்டும் 69% இட ஒதுக்கீடு எதற்கு?' என உச்சநீதிமன்றம் கேட்கிறது.

இப்படியாக தமிழக அடிமைகளைக் காட்டி இந்திய பெருச்சாளிகள் தப்புவதும், இந்தியப் பெருச்சாளிகளை கைகட்டி தமிழக அடிமைகள் தப்பிக்கும் போக்கும்தான் நடைபெறுகிறது..

இந்தியாவில் இருந்து தமிழகம் விடுதலை பெறுவதே தீர்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக