வியாழன், 3 மார்ச், 2016

வெறுப்பரசியலின் களம் தமிழ்நாடு


இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள் அண்ணன் சீமானை சந்தித்துள்ளார்கள்.. உடனே நம்ம ஆட்கள் அந்தப் போட்டோவை தூக்கிட்டு வந்துவிட்டார்கள். இந்துத்வ கைக்கூலி, ஆர்.எஸ்.எஸ் அடியாள் என பல கதைகளை எழுதுகிறார்கள்.

முன்பு மோடியை திருமா சந்தித்த போதும், துக்ளக் விழாவில் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு பேசியபோதும் இப்படித்தான் சேறு வாரி இறைத்தார்கள்.

மாற்றுக்கருத்து உடையவர்களை மனிதர்களாக கூட மதிக்கக் கூடாது என்கிற அளவுக்கு வளர்ந்துள்ள பாசிசத்தின் வெளிப்பாடுதான் இது. காவி பாசிசத்திற்கு சற்றும் குறைவில்லாதது இந்தப் பாசிசம்.

ஆனால் இது போன்ற ஆட்கள் சில நேரம் அதிக நாகரீகத்துடன் பதிவும் போடுவார்கள். அத்வானியும் சோனியாவும் அருகருகே இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 'இந்த மாதிரி நாகரீக அரசியல் தமிழகத்தில் வராதா!!' என் உச்சுக்கொட்டுவார்கள்.

ரொம்ப முரணான இப்படியான ஆட்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை..

காவி அரசியலில் மூழ்கியுள்ள அர்ஜுன் சம்பத் வகையறாக்களை மீட்பது முற்போக்கா??
அல்லது மேலும் மேலும் காவி சகதிக்குள் அவர்களை அழுத்துவது முற்போக்கா?? என்பதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக