ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினி அரசியல் அறிவிப்பு குறித்த எதிர்வினைகள்

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறத் துவங்கும்போது மக்களை அரசியல் நீக்கம் செய்ய சிலக் கோமாளிகள் களத்தில் இறக்கப்படுவது இயல்புதான்.



***************

மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மக்களே  போராடுவதுதான்   உண்மையான அரசியல். இந்த அரசியல் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனால் போராட்டமே வேண்டாம் என்கிறார் ரஜினி.
"நல்லா வாழு, நல்லதே நினை" என ஆன்மீக சொற்பொழிவு கொடுப்பதுதான் ரஜினியின் அரசியல்.

****************

சாமானியன்: ஐயா, எங்க ஊருல தண்ணீர், சாலை வசதி இல்லைங்க. ரொம்ப கஷ்டப்படுறோம்.

ரஜினி: நிம்மதியா தியானம் பண்ணுங்க. நல்லதையே நினைங்க. நல்லதே நடக்கும்.

சாமானியன்: ???

****************

யாரும் அரசியல் பேச வேண்டாம்.
விமர்சனங்கள் வைக்க வேண்டாம்.
அறிக்கைகள், போராட்டங்கள் வேண்டாம்.
ஆன்மீக அரசியலை முன்னெடுப்போம்.
தேர்தலில் சந்திப்போம்...

// இதைதான் சொல்லுறார் ரஜினி.
விஜயகாந்தை விட மோசமா இருக்கு...

*************

போராட்டத்தினால்தான் ஜல்லிக்கட்டு காப்பாற்றப்பட்டது.
போராட்டத்தினால்தான் காவிரி, முல்லைப்பெரியாறு உரிமைகள் தக்கவைக்கப்பட்டன.
போராட்டத்தினால்தான் ராஜீவ் மரண வழக்கில் நிருபராதிகள் தூக்கு நிறுத்தப்பட்டது.
போராட்டத்தினால்தான் மதுக்கடைகள் மூடல் நடந்தது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
போராடாமல் இங்கே எதுவும் நடக்காது.

ஆனால் போராட்டம் செய்பவர்களை மிகவும் ஏளனமாகப் பேசுகிறார் மேட்டுக்குடி ரஜினி.

************

"இந்த ஜனநாயக நாட்டுல யார் வேண்டுமானாலும்...." என குரூப் வாதிடுகிறது...
:) :)

மராட்டியத்திலும் கர்நாடகாவிலும் ஜனநாயகம் கிடையாதா.. அங்கெல்லாம் தேர்தல்ல நிக்க முடியாதா?
தமிழ்நாடேதான் வேணுமா ரசினிக்கு???

************

நேரே தேர்தலுக்கு வந்து முதல்வர் ஆவதுதான் ரஜினியின்  கொள்கை..

இன்னும் மூணரை வருசம் இருக்கு..
அதுக்குள்ளே இன்னிக்கு பேசினதை அவரே மறக்க வாய்ப்பு உண்டு

*************

கொள்கையை கேட்டால் தலையே சுத்துதான் ரஜினிக்கு..
என்ன ஒரு ஆணவப் பேச்சு!
இன்னும் என்னென்னவோ கேள்விகள் வரும்.  அதுக்கு நெஞ்சு வலி வருமோ!!

***********
தமிழர் எழுச்சியோடு துவங்கிய 2017 வருடம்
ஒரு கோமாளி பற்றிய அரசியல் விவாதத்தோடு முடிகிறது..
**********


வெள்ளி, 8 டிசம்பர், 2017

அய்யா வழி வேறு, இந்து மதம் வேறு

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வருணாசிரமம் படி மனிதரை நால்வகையாய் கூறுபோட்டது இந்து மதம்.
"அய்யா வழி மக்கள்" என்று ஒருமைப்படுத்தி அன்பை மட்டுமே போதித்தது அய்யா வழி.

சாணார்(நாடார்) உள்ளிட்ட பதினெட்டு சாதியினர் இடுப்பில்தான் துண்டைக் கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது பிராமண இந்து மதம்.
துண்டை எடுத்து சுயமரியாதையுடன் தலையில் கட்டி விட்டது அய்யா வழி.

மேல்சாதி, கீழ்சாதி என பிரித்து வைத்து மனுதர்மம் காத்தது இந்து மதம்.
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்கிறது அய்யா வழி.
அனைவரும் சமபந்தியில் அமரவைத்து, உணவளித்து உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டியது அய்யா வழி.

குறிப்பிட்ட சில சாதிகள் மட்டுமே கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிப்பது இந்து மதம்.
அனைத்து சாதியினரும் நிழல்தாங்களுக்குள் செல்ல அனுமதிப்பது அய்யா வழி.

இதிகாச கற்பனைத் தெய்வங்களை வணங்க சொன்னது இந்துமதம்.
"உனக்குள் இருக்கும் உன்னை உணர்" என்று வலியுறுத்தும் விதமாக கண்ணாடியை நிழல்தாங்களுக்குள் வைத்து வணங்க சொன்னது அய்யா வழி.

பில்லி, சூனியம், மந்திரம், யாகம்,  உள்ளிட்ட  மூடநம்பிக்கைகளை  ஊக்குவிப்பது  இந்துமதம்.
அனைத்து மூடநம்பிக்கைகளையும் கடலில் தூக்கி வீசுங்கள் என கூறியவர் ஐயா வைகுண்டர்.

பெண்களைத் தீட்டு என்று கூறி கோவிலுக்குள் விட மறுத்தது இந்து மதம்.
பெண்களையும் அய்யா வழிப் பதிகளில் அனுமதித்து பாலின சமத்துவம் அளித்தது அய்யா வழி.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய  இந்துமத, பிராமண, உயர்சாதிக் கொடுமைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற புரட்சி செய்தவர் ஐயா வைகுண்டர்.
அவர் போதித்த அகிலத்திரட்டும், இந்துமத பகவத் கீதையும் ஒன்றல்ல.
வைகுண்டர் வழிவந்தவர்கள் இன்று இந்து மதத்தின் பிடியில் சிக்கித் தவிப்பது காலத்தின் கொடுமை.

புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறி விழுங்கிய இந்துமதம் வைகுண்டரையும் அவ்வாறே விழுங்கியது.