ஞாயிறு, 30 டிசம்பர், 2018

நூல் விமர்சனம்: 'ஈரோட்டுப் பாதை சரியா?' - ப.ஜீவானந்தம் (புதுமை பதிப்பகம்)

வழக்கமா பெரியார் குறித்து விமர்சனங்களில் ஒருவித வெறுப்பு அரசியல் இருக்கும், அவதூறுகள் இருக்கும், தவறான தகவல்கள் இருக்கும்.
ஆனால் இந்த நூல் பெரியாரின் முரண்பாடான நிலைப்பாடுகளை நேர்மையாக அலசுகிறது.

காங்கிரஸ் மீதான  கண்மூடித்தனமான எதிர்ப்பால் உப்புசத்தியாகிரகம் மற்றும் சட்டமறுப்பு இயக்கங்களை புறக்கணித்தது,
"சமூக சீர்திருத்த இயக்கமா? அரசியல் இயக்கமா?" என்பதில்  முரண் நிலைப்பாடுகள்,
ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பில் அக்கறை காட்டாமை என பல தகவல்கள் நிரம்பியுள்ளன.

ஜஸ்டிஸ் கட்சி(நீதிக்கட்சி) என்பது  பெரிய முற்போக்கு கட்சி அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரியாரின் நாத்திக & பொதுவுடைமை பிரச்சாரங்களுக்கு தடை போட்டது, பெரியாரைக் கைது செய்தது என பல அட்டூழியங்களை செய்துள்ளது நீதிக்கட்சி. ஆனாலும் அந்த மானங்கெட்ட கட்சியை ஆதரித்திருக்கிறார் பெரியார்.

"நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்கிற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்த காரணத்திற்காக தோழர்.ஜீவானந்தம் மற்றும் வெளியிட்ட ஈ.வெ.கிருஷ்ணசாமி  (பெரிய நாயக்கர் என்று அழைக்கப்பட்டாராம்) ஆகியோரை சிறையில் அடைத்தது நீதிக்கட்சி அரசு. இந்த விவகாரத்தில்  மன்னிப்பு கேட்குமாறு ஜீவானந்தம் அவர்களை வற்புறுத்தியிருக்கிறார் பெரியார்.
இவ்வாறு பல புதிய தகவல்கள் நிரம்பியுள்ளன.



வெள்ளி, 11 மே, 2018

ஆபரேஷன் நமோ

கடந்த நாடாளுமன்றத்தேர்தல்(2014) நடக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே "மோடி அலை" என்னும் மாயத்தை திட்டமிட்டு உருவாக்கினார்கள். குஜராத்தில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல சித்தரித்தார். "குஜராத் ஒளிர்கிறது", "vibrant குஜராத்" என ஏதேதோ பேசினார்கள்.

சரி, இதெல்லாம் இந்தியா முழுக்க அனைத்து இடங்களிலும் எப்படி போய் சேர்ந்தது?
சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டுமே. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் மூலமாக பொய் செய்திகளைப் பரப்பினார்கள். போட்டோஷாப், மார்பிங் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டன.
நானும் ஆரம்பத்தில் இந்த கதைகளை நம்பினேன். நம்பவைக்கப்பட்டேன்.

கடந்த நாலு வருடத்தில் என்ன நடந்தது?
விலைவாசி குறைந்ததா? இல்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்ததா? இல்லை.
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டனவா? இல்லை.
விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டதா? இல்லை.
இங்கே எதுவும் நடக்கவில்லை.

ஆனால் என்ன நடந்தது?
முதலாளிகளுக்கு அதிக கடன் தள்ளுபடிகள் செய்யப்பட்டன.
மக்கள் விரோத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
பல உதாரணங்களை சொல்ல முடியும்.
என்ன சாப்பிட வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் என்னும் ஒரு மதவாதக் கும்பல் தீர்மானிக்கும் நிலை உள்ளது.
மாட்டுக்கறி உண்டதற்காக கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டது.
இந்துத்துவமும், இந்தியும் திணிக்கப்படுகின்றன. பெரும் பாசிசத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. எதிர்த்து கேள்வி எழுப்பியோர் ஒடுக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். நீதிமன்றம், சிபிஐ, வருமானவரித்துறை அனைத்தையும் தன் நலனுக்காக பாஜக பயன்படுத்தியது.

எப்படி தடுத்து நிறுத்துவது?
அவர்கள் சென்ற அதே வழியில்தான் நாமும் அவர்களை வீழ்த்த முடியும்.
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் ஆகியவற்றை பாசிச எதிர்ப்புக்காக பயன்படுத்துவீர். சொந்தக்காரன் என்ன நினைப்பான்? கூட வேலை செய்றவன் என்ன நினைப்பான்? போன்ற தயக்கங்களை விட்டொழியுங்கள். ஏனெனில் பாஜக ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் இப்படியெல்லாம் நினைப்பதே இல்லை. மோடி ஆதரவு நிலைப்பாடு எடுப்பவர்களிடம் ஆரோக்கியமான  விவாதம் செய்யுங்கள். உண்மையான ஆதாரங்களோடு விளக்குங்கள். மோடி(பாசிச) எதிர்ப்பை வலுப்படுத்துங்கள்.

சரி, என்னதான் தீர்வு?
நிச்சயமாக காங்கிரஸ் தீர்வு  கிடையாது. மாநில சுயாட்சியே தீர்வு.
இந்தியா முழுவதும் உள்ள  மாநிலக் கட்சிகளை வலுப்படுத்தி அதிகாரத்தைப் பகிர்வதே தீர்வு. அப்போதுதான் மாநில உரிமைகளைக் காக்க முடியும். மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்க முடியும்.

”ஆபரேஷன் நமோ"வில் தங்களை இணைத்துக் கொள்வீர்.
மோடி ஆட்சியின் அவலங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களிடம் எடுத்து செல்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்போது நாம் விட்டால் நம் தலையில் நாமே மண் அள்ளிப்போட்டது போல ஆகிவிடும்.
2019 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. ஒருவேளை மீண்டும் பாஜக பெரும்பான்மையோடு  வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதற்கு அடுத்த வருடங்களில் தேர்தலே இல்லாத நிலை ஏற்படும். சர்வாதிகாரத்தின் கீழ் வாழ நேரிடும்.
சிந்தித்து செயல்படுவீர்

வியாழன், 4 ஜனவரி, 2018

வரலாறு தெரிய வேண்டும் என்பதெல்லாம் ஓர் அரசியல் தகுதியா?

"ரஜினிக்குத்  தமிழர் வரலாறு தெரியுமா? பூலித்தேவனைப் பற்றித் தெரியுமா? தீரன் சின்னமலை பற்றித் தெரியுமா?..." என தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனே பத்ரி சேசாத்திரிக்கு கோபம் வந்துவிட்டது. அவரும் ரஜினியின் "ஆன்மீக" வழியில் செல்லும் நபராச்சே!
(பாபர் மசூதி இடிப்பின்போது பெரும்  மகிழ்ச்சியில்  இருந்த 'ஆன்மீக'வாதிதான் இந்த சேசாத்திரி.)

"வரலாறு தெரிந்து என்ன செய்யப் போகிறார்? இதெல்லாம் ஒரு தகுதியா? ஓபிஎஸ்க்கு வரலாறு  தெரியுமா?..." என எதிர் கேள்வி எழுப்பியிருந்தார் பத்ரி.

மேலோட்டமாக யோசித்தால் பத்ரி கூறுவது சரிதானே எனத் தோன்றும். ஆனால் முற்றிலும் தவறு.

மேலும் அவரது கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.
வரலாறு தெரியாத காரணத்தினால்தான் ஓபிஎஸ் போன்றோரை இந்துத்துவக்/பிராமணக்  கும்பல் தங்களின் அடிமையாகப்  பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

வரலாற்றை மறந்த காரணத்தினால்தான் விடுதலைப் போராளிகளை, பெருமைமிக்க அடையாளங்களை சாதியக் கும்பல்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டன.
தற்போது இந்துத்துவக் கும்பலும் அந்தப் பணியைத்தான் செய்கின்றன. மருது ஜெயந்தி கொண்டாடுவது, தீரன் சின்னமலைக்கு விழா எடுப்பது என பல செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதனை எதிர்கொண்டு முறியடிக்க அரசியல் செய்ய வேண்டும். அதற்கு வரலாற்றுப் பார்வை வேண்டும்.
ஆகவே இங்கு அரசியலில் இருப்போருக்கு வரலாற்றுப் பார்வை கட்டாயம் இருக்க  வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?